2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யப்பான் கோபே நகர அரசாங்கத்தின் துறைமுக மற்றும் நகர கருத்திட்டப் பணியகத்திற்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் பரஸ்பர உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - யப்பான் கோபே நகரத்தில் நடாத்தப்படவுள்ள "சருவதேச துறைமுகங்கள் பற்றிய மாநாட்டில்" கலந்து கொள்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஆசிய வலயத்தின் சமுத்திர நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான விசேட சந்தர்ப்ப மொன்றாவதோடு, இதன்போது இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் யப்பான் கோபே நகர அரசாங்கத்தின் துறைமுக மற்றும் நகர கருத்திட்டப் பணியகத்திற்கும் இடையில் பரஸ்பர உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |