• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல் - (தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் - சட்டத்தரணியொருவரை அணுகுதல்)
- பொலிஸ் காவலிலுள்ள சந்தேக நபர் ஒருவரின் உரிமைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு திருத்த சட்டங்களை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு 2017‑01‑10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக, சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ளதும் சட்டமா அதிபரினால் இசைவாக்கம் வழங்கப்பட்டுள்ளதுமான "குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்தை" வர்த்மானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.