2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த காணியிலிருந்து விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்திற்கும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் காணிகளை குறித்தொதுக்குதல் - விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம் சார்ந்த அபிவிருத்தி பணிகளை மேம்படுத்துவதற்காகவும் அதுசார்ந்த நிறுவனங்களை தாபிக்கும் பொருட்டும் ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த பிரதேசத்திலுள்ள சுமார் 34 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணியை சுவீகரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணியிலிருந்து சுமார் 46 ஏக்கர் விஸ்திரணமுடைய காணியை அரசாங்கத்தின் பிரதான விலைமதிப்பீட்டாளரினால் மதிப்பிடப்படும் பெறுமதியை செலுத்துவதற்கு உட்பட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |