• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்தின் சப்பிரகமுவ மாகாண அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக இரத்தினபுரி, புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை வழங்குதல்
- சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்தின் சப்பிரகமுவ மாகாண அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான இரத்தினபுரி புதிய நகரத்திலுள்ள "பாம் கார்டன் வத்த" என்னும் காணியிலிருந்து 20 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இரத்தினபுரி பிரதேச செயலாளரின் ஊடாக சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்திற்கு உடமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.