• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசுடமை விசேட உட்கட்டமைப்பு வசதிகள் கம்பனியொன்றின் மூலம் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களுக்கு நிதி வழங்குதல்
- வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான தொழிற்பாட்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி பொறுப்புடன் நிதியினை முகாமித்து நாட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்கு பங்களிப்பு நல்கும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கமைவாக, கண்டறியப்பட்டுள்ள அதிவேகப் பாதை கருத்திட்டங்களின் முழுமையான வினைத்திறமையுடன் முதலீடு செய்வதற்கு வசதியளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் சொந்தமான பொறுப்புகள் வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியொன்றாக "விசேட உட்கட்டமைப்பு வசதிகள் கம்பனியை" தாபிப்பதற்கும் தற்போது நிருமாணிக்கப்பட்டுள்ள தெற்கு, சுற்றுவட்டம், கொழும்பு - கட்டுநாயக்க ஆகிய அதிவேகப் பாதைகளினதும் நிருமாணிக்கப்பட்டு வரும் அத்துடன் எதிர்காலத்தில் நிருமாணிக்கப்படும் அதிவேகப் பாதை கருத்திட்டங்களின் சொத்துக்களை இந்தக் கம்பனிக்கு கையளிப்பதற்கும் இந்த சொத்துக்களின் அடிப்படையில் முதலீட்டாளர் களிடமிருந்து முதலீட்டினை ஈட்டிக் கொள்வதற்கு அல்லது இந்த சொத்துக்களை பிணையாக வைத்து புதிய அதிவேகப் பாதைகளை நிருமாணிப்பதற்கு கடன் பெற்றுக் கொள்வதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.