• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழில் நியாயசபைகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அவர்களுக்காக தோன்றுவதற்குமான உரிமையை நீடிப்பதற்காக கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்துதல்
- கைத்தொழில் பிணக்குகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள தொழில் நியாய சபைகளின் பொறுப்பாவது அங்கீகரிக்கப்பட்ட நியாயமான மற்றும் உண்மையான மூல தத்துவங்களின் கீழ் துரிதமாகவும் குறைந்த செலவுடனுமான பொறிமுறையொன்றின் கீழ் தொழில் பிணக்குகளை தீர்த்து வைப்பதாகும். சாதாரண ஊழியர் சமூகம் இலகுவாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நியாய சபையொன்றாக செயலாற்றுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டாலும், சட்டத்தரணிகளல்லாத பிரதிநிதிகளுக்கு ஒரு தரப்பு சார்பில் தோற்றுவதற்கு இடமளிக்காது சில நியாய சபைகளின் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பிழையான பொருள்கோடல் காரணமாக சாதாரண ஊழியர்களுக்கு அநீதி நிகழ்ந்துள்ளமை பற்றி கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சட்டத்தரணிகளல்லாதவர்களுக்கு தொழில் நியாய சபைகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அவர்களுக்காக தோன்றுவதற்குமாக இடமளிப்பதற்கும் தொழில் ஆணையாளர் அல்லது தத்துவம் பெற்ற உத்தி்யோகத்தர் ஒருவர் முன்னிலையில் நடாத்தப்படும் விசாரணைகளின் போது சட்டத்தரணியொருவர் தோற்றுவதற்கு தடைவிதித்து நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளை நீக்குவதற்கும் தொழில் நியாய சபையினால் வழங்கப்படும் கட்டளையொன்றை தொழில் கொள்வோர்களினால் பின்பற்றாத சந்தர்ப்பங்களில் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போது தொழில் ஆணையாளருக்குள்ள அதிகாரத்தை தொழில் நியாய சபைகளின் தலைவர்களுக்கு வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் கைத்தொழில் பிணக்குகள் சட்டத்திற்கு பொருத்தமான திருத்தங்களை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.