2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இயற்கை வளங்களின் பேணுகை மற்றும் வனசீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரிந்துணர்வினை கட்டியெழுப்புதல் என்பன சார்பில் இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல் - இயற்கை வளங்களின் பேணுகை மற்றும் வனசீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரிந்துணர்வினை கட்டியெழுப்புதல் என்பன சார்பில் பொது மக்களுக்கு அறியச் செய்விக்கும் நோக்கத்திற்காக இலங்கை சாரணர் இயக்கத்தினதும் பெண்கள் சாரணியர் இயக்கத்தினதும் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மூன்று (03) வருட காலத்திற்குள் இலங்கை வனவுயிர் நம்பிக்கை பொறுப்பின் ரன்தெனிகல பயிற்சி நிலையத்தில் நடாத்திச் செல்லும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |