• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் நிதித்துறை நவீன மயப்படுத்தலுக்காக நிதிதுறை சார்ந்த மேம்பாட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
- இலங்கை நிதித்துறையில் அத்தியாவசியமாக செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, நிதித்துறையின் அபிவிருத்தியை குறியிலக்காகக் கொண்டு குறித்த மறுசீரமைப்புகளிலிருந்து சிலவற்றை 2017-2022 காலப்பகுதிக்குள் "நிதித்துறையின் நவீன மயப்படுத்தல் கருத்திட்டம்" மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய மட்ட மறுசீரமைப்பு சார்பில் நிதி உதவிகளை வழங்குதல், ஒழுங்குறுத்துகை நிறுவனங்களின் நிறுவன ரீதியிலான கட்டமைப்பை பலப்படுத்துதலும் இந்தத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துதலும் மற்றும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலும் மேற்பார்வை செய்தலும் ஆகிய மூன்று கூறுகளின் கீழ் இந்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக, நிதி அமைச்சு, மத்தியவங்கி, பிணைமுறிகள், நாணயமாற்று ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதிச் சபை ஆகிய நிறுவனங்களினால் 2017-2027 காலப்பகுதிக்குள் "நிதித்துறையின் நவீன மயப்படுத்தல் கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் சார்பில் உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட எடுத்தல் உரிமை கடன் தொகையொன்றைப் பெற்றுக்கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.