• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை வலுவூட்டுதல் சார்பில் யப்பான் மானிய உதவியைப் பெற்றுக் கொள்ளல்
- யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் பொருட்டு யப்பான் அரசாங்கம் வருடாந்தம் பல்வேறுபட்ட மானிய உதவிகளின் கீழ் இலங்கைக்கு மானிய உதவிகளை ஏற்பாடு செய்து வழங்குகின்றது. இதற்கமைவாக இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை வலுவூட்டும் பொருட்டும் 2016 / 20017 நிதியாண்டிற்குள் 250 மில்லியன் யப்பான் யென்கள் (சுமார் 327 மில்லியன் ரூபா) பெறுமதிமிக்க யப்பான் உற்பத்திகளை கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக குறித்த 250 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட மானிய உதவியை பெற்றுக் கொள்வதற்காக யப்பான் அரசாங்கத்துடன் மாற்றல் பத்திரங்களில் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.