• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேதனப் பசளை உற்பத்தி செய்தல், குளிரூட்டல் வசதிகளைத் தாபித்தல் மற்றும் மின் பிறப்பாக்கல் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
- உணவுக்கான பயிர்ச்செய்கைகளின் போது இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப் பசளைகள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மரக்கறி மற்றும் பழவகைகளை பதனிட்டு வைத்தல், கழிவு முகாமைத்துவம், மாற்றுவலுசக்தி பிறப்பாக்கல் ஆகிய உயர்முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய சவாலுக்கு தீர்வு வழங்கும் கூட்டுக் கருத்திட்டமொன்று நாட்டிலுள்ள சில கம்பனிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஜேர்மன் கம்பனியொன்று முன்வந்துள்ளது. இந்த முதலீட்டின் கீழ் கண்டி நகரசபையின் கழிவு முகாமைத்துவ பொறியகத்திற்கு அண்மையில் கழிவுகள் மூலம் சேதனப்பசளை உற்பத்தி செய்யும் பிரிவொன்றைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, முதலாம் ஆண்டில் இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சேதனப்பசளை வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனிக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி 6 - 10 மெகா வொட் தேசிய மின்சார முறைமையில் சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, களஞ்சியங்கள் நிருமாணிக்கப்படுவதன் மூலம் வீணாகும் மரக்கறி மற்றும் பழவகைகளின் அளவினை குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யபய்பட்டுள்ளவாறு இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.