2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
15. பொலிஸ் வைத்தியசாலையை மேம்படுத்துதல் - 1911 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை பொலிஸ் வைத்தியசாலை இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் போதுமானவாறு சுகாதார வசதிகளை வழங்கக்கூடிய விதத்தில் மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, கொழும்பு நாரஹேன்பிட்ட பிரதேசத்திலுள்ள பொலிஸ் வைத்தியசாலையை நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையொன்றாக புனரமைப்பதற்காக இந்த வைத்தியசாலையின் முன்பக்கமாக அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 02 றூட் 23.5 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணியை இலங்கை பொலிசுக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |