2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியல் ரீதியிலான காரணங்களின் மீது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஆளானவர்களுக்கு சலுகையளித்தல் - பல்வேறுபட்ட அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களுக்கு ஆளான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சலுகையளிக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட 2015‑04‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 09/2015 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அரசாங்க நிருவாக சுற்றறிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 31,666 மேன்முறையீடுகள் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றுள் 23,093 மேன்முறையீடுகள் தொடர்பிலான சிபாரிசுகள் மூன்று (03) கட்டங்களாக ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நாலாம் (04) கட்டமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மீதி 8,573 மேன்முறையீடுகளிலிருந்து ஆறு (06) அமைச்சுகளுக்குரிய 3,440 மேன்முறையீடுகள் சம்பந்தமான சிபாரிசுகள் உரிய நிருவாக அதிகாரபீடங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |