2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு சந்தையில் தேங்காய் விலையை கட்டுப்படுத்துதல் - 2016 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைவாக 2017 ஆம் ஆண்டில் சனவரி - ஆகஸ்ட் காலப்பகுதிக்குள் சுமார் 13.9 சதவீதத்தால் உள்நாட்டு தேங்காய் விளைச்சல் குறையலாமென தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளதோடு, இதன் காரணமாக தேங்காய் விலை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம். ஆதலால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான காய் தேங்காய் கேள்வியை குறைப்பதன் மூலம் உள்நாட்டு சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பை குறைத்து தெங்கு செய்கையாளர்களுக்கும் அதேபோன்று தேங்காய் சார்ந்த உற்பத்தியாளர்களுக்கும் நலன் பயக்கும் விதத்தில் உள்நாட்டு தேங்காய் விலையை ஏற்கக்கூடிய மட்டத்தில் பேணும் பொருட்டு குறுகியகால திறமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, நான்கு மாதங்களுக்குத் தேவையான உணவு எண்ணெய் 40,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் பின்வருமாறு விசேட பண்ட வரியை திருத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. i. தேங்காய் எண்ணெய் மீது கிலோகிராம் ஒன்றுக்கான விசேட பண்ட வரியை 150/- ரூபாவிலிருந்து 130/- ரூபா வரை குறைத்தல். ii. சுத்திகரிக்கப்படாத மரக்கறி எண்ணெய் / தேங்காய் எண்ணெய் மீது கிலோகிராம் ஒன்றுக்கான விசேட பண்ட வரியை 130/- ரூபாவிலிருந்து 110/- ரூபா வரை குறைத்தல். iii. மரக்கறி விதை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மரக்கறி எண்ணெய் மீது கிலோகிராம் ஒன்றுக்கான விசேட பண்ட வரியை 150/- ரூபாவிலிருந்து 130/- ரூபா வரை குறைத்தல். |