2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முதிய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களுக்கு சலுகை அளிப்பதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்தல் - தங்களுடைய வாழ்நாளை கலைக்காக அர்ப்பணித்து, கலைத்துறைக்கு பாரிய பங்களிப்பை நல்கிய முதிய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களிடமிருந்து குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உதவித் திட்டத்தின் கீழ் இந்த கலைஞர்களுக்கு தற்போது வருடாந்தம் பெற்றுக் கொடுக்கப்படும் 5,000/- ரூபாவைக் கொண்ட உதவித் தொகையை 10,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த உதவித் தொகையை வழங்குவதற்காக குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களை தெரிவு செய்வதற்கான வழிமுறையானது உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவையினால் இந்த வழிமுறையானது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |