• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய லொத்தர் சபை சார்பில் புதிய சட்டமொன்றைத் தயாரித்தல்
- 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் மூலம் தேசிய லொத்தர் சபை தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சபையினால் 09 சீட்டிழுப்பு லொத்தர்களும் இரண்டு உடனடி சீட்டிழுப்புகளும் பேணப்பட்டு வருகின்றதோடு, 2015 ஆம் ஆண்டில் ஈட்டிக் கொள்ளப்பட்ட வருமானமானது 17.5 பில்லியன் ரூபாவாகும். நடைமுறையிலுள்ள சட்டத்தில் காணக்கிடைக்கும் குறைபாடுகளை சீர்செய்து கொண்டு, நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு அதனை திருத்தும் தேவை அரசாங்க தொழில்முயற்சிகள் மீதான பாராளுமன்ற குழுவினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்போதைய சந்தை போக்கினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு செய்யப்பட வேண்டிய மாற்றங்களை உள்ளடக்கி தேசிய லொத்தர் சபை சார்பில் புதிய சட்டமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.