• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்தினால் சருவதேச முறிகளை வழங்குதல் - 2017
- 2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டத்திற்கு அமைவாக அரசாங்கத்தின் உச்ச கடன்படலில் செலுத்தப்படாத நிலுவை 2017 ஆம் நிதியாண்டில் 1,579.11 பில்லியன் ரூபாவாகும். 2017 ஆம் ஆண்டினுள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் மற்றும் வட்டி செலுத்துகைகள் சார்பில் 1,480 பில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த கடன்படல் எல்லையினுள் 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சருவதேச முறிகளை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.