2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
“சுயசக்தி" தேசிய நிகழ்ச்சித்திட்டம் - ஒரு மில்லியன் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்காக "சுயசக்தி" தேசிய நிகழ்ச்சித்திட்டம் என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 25,000 புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குவதற்காக பிராந்திய அபிவிருத்தி வங்கி உட்பட வணிக வங்கிகளின் மூலம் கடன் வசதிகளை ஏற்பாடு செய்வது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் வெற்றிகரமான வர்த்தக திட்டங்களின் பொருத்தமான தன்மையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 250,00/- ரூபா என்னும் உச்சத்திற்கு உட்பட்டு நிதி வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதோடு, புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு 50,000/- ரூபாவைக் கொண்ட நிதியுதவியுடன் 200,000/- ரூபாவைக் கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கடன் / மானிய திட்டத்தை இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |