• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிபிலை சீனி அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கை மகாவலி அதிகாரசபையின் ரம்பக்கன்ஓயா விசேட பொருளாதார அதிகார பிரதேசத்தில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு கூடிய வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பயிர்ச் செய்கை காணிகளை வழங்கி சீனி அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சியொன்றான இந்த கருத்திட்ட பிரேரிப்புக்கு அமைவாக கருத்திட்டத்தின் மொத்த வெளிநாட்டு முதலீடு 152.25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகுமென்பதோடு, இதன் கீழ் வருடாந்தம் 80,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்வதற்கும் 1,000 நேரடி தொழில் வாய்ப்புகளையும் மறைமுகமாக 75,000 தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று விலங்கு உணவு, சேதனப் பசளை போன்ற துணை உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கும் சுமார் 20 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யும் துணைக் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பிபிலை மற்றும் மெதகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளையும் உட்சேர்த்து இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.