• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிபர்களுக்காக வழங்கப்படும் விசேட படியைத் திருத்துதல்
- இலங்கையில் கல்வி முகாமைத்துவத்தில் முக்கிய வகிபாகம் அதிபர்களினால் நிறைவேற்றப்படுவதோடு, ஏதேனும் பாடசாலையொன்றின் வெற்றி அந்த பாடசாலையின் அதிபரின் வினைத்திறனிலும் முறையான முகாமைத்துவ செயற்பாட்டிலும் தங்கியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 10,162 தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர்களினால் நிறைவேற்றப்படும் உட்சிக்கல் வாய்ந்ததும் பொறுப்பு மிக்கதுமான பணியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அதிபர்களுக்காக தற்போது வழங்கப்படும் விசேட படியை அதிகரிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.