2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு கருத்திட்டம் - மதியுரை ஒப்பந்தத்தின் செலவினைத் திருத்துதல் - வட மாகாணத்தில் மீளக் குடியமர்த்துவதற்கு உதவியளித்தல், யாழ்ப்பாணம் குடா நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் என்னும் நோக்கினை முன்நிறுத்தி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு கருத்திட்டத்தின் மூலம் இந்த மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 300,000 பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் ஒப்பந்தக்காரரினது கட்டுப்பாட்டிற்குப் புறம்பான காரணங்களின் மீது நிகழ்ந்துள்ள ஒப்பந்த செலவு மாற்றத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கருத்திட்டத்தின் ஒப்பந்த செலவினை திருத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |