2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மகாவலி இடதுகரை தாழ் ஆற்றுப்படுகை அபிவிருத்தி கருத்திட்டம் - திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, கந்தளாய் ஆகிய பிரதேச செயலக அதிகார பிரதேசங்களையும் பொலன்நறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலக அதிகார பிரதேசத்தையும் உள்ளடக்கும் விதத்தில் 4,000 ஏக்கர் காணிகளுக்கு இரு போகங்களிலும் நீர்பாசனம் வழங்கும் நோக்கில் 6,250 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள செலவில் "மகாவலி இடதுகரை தாழ் ஆற்றுப்படுகை அபிவிருத்தி கருத்திட்டத்தை“ நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |