• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிய, வெதமுல்ல பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்படும் பெண் துறவிகள் மடம் அமைந்துள்ள காணித் துண்டை இந்த பெண் துறவிகள் மடத்திற்கு உடைமையாக்குதல்
- களனிய, வெதமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணித் துண்டு சுதர்மா பெண் துறவிகள் மடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அரச மரம் நடப்பட்டுள்ள அதற்கு அண்மையில் அமைந்துள்ள காணித் துண்டும் இந்த மடத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக இந்த பெண் துறவிகள் மடத்தினால் பயன்படுத்தப்பட்டு வரும் 7.56 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய முழுக் காணித் துண்டையும் இந்த பெண் துறவிகள் மடத்திற்கு உரிமையை நிர்ணயித்து உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.