2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வட மாகாணத்தின் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தின் ஆரம்ப கருத்திட்ட நடவடிக்கைகளுக்காக கருத்திட்ட வடிவமைப்பு முற்பணக் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல் - போஷாக்கு நிலைமை, உணவு பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் உற்பத்திகள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் வட மாகாணத்தில் வசிக்கும் மீனவ சமூகத்தின் வருமான நிலையை உயர்த்தும் நோக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களை தழுவும் விதத்தில் "வடமாகாணத்தின் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்மூலம் வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 40,000 மீனவ குடும்பங்களுக்கு நலன்கள் கிடைக்கப் பெறும். இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்ப கருத்திட்ட நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முற்பணக் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதன் சார்பில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |