2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு நிதி வசதிகளை வழங்குதல் - பிரதேசங்களுக்கு இடையிலான தொடர்பினை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமை கருத்திட்டங்களில் ஒன்றாக மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டமானது அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டத்தின் II ஆம் பகுதியை நிருமாணிப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தேவையான 23.2 பில்லியன் ரூபா கொண்ட தொகையை தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்தும் மக்கள் வங்கியிடமிருந்தும் கடன் வசதியாகப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |