2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தைத் துரிதப்படுத்துதல் - குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளின் உரிமைகளை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 620,000 வீடுகள் 2019 ஆம் ஆண்டளவில் நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது உரிய காலக்கட்டமைப்பிற்குள் நிறைவேற்றப் படுவதனை உறுதிப்படுத்திக் கொண்டு, இந்த கருத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாக துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில் பொது திறைசேரியின் கீழ் விசேட பிரிவொன்றை (வரைய றுக்கப்பட்ட பொதுக் கம்பனியொன்றை) தாபிப்பதற்கும் இந்த பணிப் பிரிவுக்கு குறித்தொதுக்கப்படும் சகல காணிகள் சார்பிலும் காணி வங்கியொன்றைத் தாபிப்பதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |