2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதிமன்றங்களுக்கு புதிய கட்டட வசதிகளை வழங்குதல் - தற்போதுள்ள நீதிமன்றக் கட்டடங்கள் மிகப் பழைமையானவையாக உள்ளமை, சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்றவகையில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, இந்த நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளும் போது நீதிமன்றக் கட்டங்களில் நிலவும் இடவசதிகள் போதுமானதாக இல்லாமை போன்ற காரணங்களினால் புதிய நீதிமன்றக் கட்டங்களை நிருமாணிப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக கம்பொல, ருவன்வெல்ல, மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீதிமன்றக் கட்டடங்களை நிருமாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கி புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிருமாணிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |