• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
- தற்போது எவரேனும் சந்தேக நபர் ஒருவரின் விரல் அடையாளம் பெற்றுக் கொள்ள முடியுமாவது குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமாக மாத்திரமாகும். அண்மையில் பல்வேறுபட்ட சட்டங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விரல் அடையாளத்தை இவ்வாறு பெற்றுக் கொள்ள இயலுமாகும் வகையில், இந்த புதிய குற்றங்களையும் குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் விரல் அடையாளம் பெற்றுக் கொள்ளவேண்டி விதித்துரைக்கப்படும் குற்றப்பட்டியலில் சேர்த்து, இந்த அட்டவணையைத் திருத்துவதற்கும் அத்தகைய குற்றமொன்று சார்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆளொருவருக்கு இடைநிறுத்திய தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போதும் குறித்த நபர் சம்பந்தமாக முன்னைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களிலும் இடைநிறுத்திய தண்டனை அமுலில் இருக்கும் காலம் முடிவடையும் வரை குறித்த நபரை பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வைக்க வேண்டுமென நீதிமன்றத்தினால் கட்டளையிடலாம் என்னும் ஏற்பாடுகளை உள்ளடக்கி குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்குமாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.