• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலைநாட்டு வலயத்தில் சிறிய தேயிலைத்தோட்ட உரிமையாளர்களுக்கு விசேட கருத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் மொத்த தேயிலைக் காணியின் சுமார் 73 சதவீதமானது சிறிய தேயிலைத்தோட்ட உரிமையாளர்களுக்கு சொந்தமாவதோடு, மொத்த தேயிலைத்தோட்டங்களில் 17 சதவீதமானவை மலைநாட்டில் பரந்து காணப்படுகின்றன. மலைநாட்டு வலையத்தில் சிறிய தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள் முகம்கொடுக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் போது தேயிலைக் கொழுந்தினை இலகுவாகக் கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில் கிராமிய பாதைகளைப் புனரமைப்பதும் அவர்களுடைய வருமானத்தை நிலையான மட்டத்தில் வைத்துக் கொள்வதற்காக தேயிலைச் செய்கையுடன் இணைந்த வாழ்வாதார அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்டுத்துவதும் விசேடமாக முக்கியமானவையாகும். இதற்கமைவாக நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள சிறிய தேயிலைத்தோட்டங்கள் சார்ந்த 200 கிராமிய நுழைவுப் பாதைகளை போக்குவரத்திற்கு ஏற்றவிதத்தில் புனரமைப்பதற்கும் மரக்கறி, பழவகைகள் மற்றும் மலர்ச்செய்கை போன்றவற்றின் மூலம் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் சிறிய தேயிலைத்தோட்டம் சார்ந்த பசுமை முன்னோடிக் கருத்திட்டமொன்றையும் சிறிய தேயிலைத்தோட்ட மேலதிக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்து வதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.