• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் தொழினுட்ப தேர்ச்சித் துறைசார்ந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம்
- திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்துடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஜேர்மனியின் மயின்ஷில் அமைந்துள்ள தொழினுட்ப கல்லூரியினால் (BBS III) விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்காக தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்திற்கும் ஜேர்மனியின் மயின்ஷில் அமைந்துள்ள தொழினுட்ப கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.