• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு தொடர்பில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- உயர் கல்வித்துறையில் கல்விசார் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கல்விசார் ஒத்துழைப்புத் தொடர்பிலான உடன்படிக்கையானது 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது. இரு நாட்டுகளினதும் உயர் கல்வித்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் அத்துடன் இரு நாடுகளிலுமுள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் 2016 - 2020 காலப் பகுதியின் சார்பில் உரிய திருத்தங்களுடன் குறித்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் வியட்நாம் கல்வி மற்றும் பயிற்சி அமைச்சுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு சம்பந்தமான புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.