• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிங்நில்வலா திசைதிருப்பல் கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை பற்றிய அறிக்கை
- கிங்நில்வலா திசைதிருப்பல் கருத்திட்டத்திற்கு 2015-01-01 ஆம் திகதியிலிருந்து 2015-01-07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பொது திறைசேரியினால் 3,549 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதோடு, நிதி ஆண்டின் ஆரம்பத்தில் இத்தகைய பெரிய தொகையை வழங்குவது அசாதாரண நிலையொன்றாகுமென இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான நிலைமை பற்றி பரிசீலனை செய்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த விடயம் சம்பந்தமாக புலனாய்வு செய்வதற்கு நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கையளிக்குமாறு இந்த அமைச்சரவை உபகுழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.