2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் நடாத்தப்படவுள்ள டிஜிட்டல் மாநாடு - அடுத்த தலைமுறையின் புதிய தொழினுட்பத்தின் முன்னோடிகள் ஆசியாவை நோக்கி அவர்களுடைய கவனத்தை கவர்வதன் மூலம் புத்தாக்கங்கள் மற்றும் தொழினுட்பங்களை அறிமுகப்படுத்துதல், தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா ஊடாக நாடுகளை இணைத்துக் கொண்டு இலங்கையை உலக டிஜிட்டல் கேந்திர நிலையமொன்றாக மாற்றுதல் போன்ற நோக்கங்களை கொண்டு 2017 மார்ச் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் டிஜிட்டல் மாநாடொன்று இலங்கையில் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. Facebook, Google, Social Capital, Infosys போன்ற துறைகளில் சருவதேச நற்பெயர் பெற்ற கம்பனிகளின் நிபுணர்களும் நிறைவேற்று உத்தியோகத்தர்களும் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|