• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறக்கோட்டை மெனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்தில் இடம் நகர்த்துவதற்காக நிலக்கால் அத்திபாரங்களின் நிருமாணிப்பு
- மேல் மாகாண மாநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புறக்கோட்டை மெனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்திற்கு இடம் நகர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக மெனிங் சந்தையை பேலியகொட பிரதேசத்தில் இடம் நகர்த்துவதற்காக காணி அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, அதன் அடுத்த கட்டமாக நிலக்கால் அத்திபாரங்களின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.