• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாணத்தில் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்திக் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- நிலவிய மோதல் நிலைகாரணமாக நீண்டகாலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த வடமாகாணத்தில் கடற்றொழில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது விசேட மற்றும் முன்னுரிமை தேவையொன்றாகும். இதற்காக நிதியிடுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக உத்தேச "வட மாகாண நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்திக் கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்தும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.