• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுயாதீன கணக்காய்வு ஒழுங்குறுத்தாளர்களின் சருவதேச சமவாயத்தின் வருடாந்த செயலமர்வை இலங்கையில் நடாத்துதல்
- உலகத்திலுள்ள சுயாதீன கணக்காய்வு ஒழுங்குறுத்தாளர்களினால் தங்களுடைய உறுப்பினர்களினால் செய்யப்படும் கணக்காய்வுக் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடி தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு சுயாதீன கணக்காய்வு ஒழுங்குறுத்தாளர்களின் சருவதேச சமவாயமானது தாபித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வுத் தரங்கள் ஆய்வுச் சபையானது 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பில் அங்கத்தவர் ஒருவராக செயலாற்றுகின்றதோடு, அதன் கலந்துரையாடல்களில் முனைப்பாகவும் கலந்துகொண்டுள்ளது. இந்த அமைப்பினால் அதன் அங்கத்துவ நிறுவனங்களின் பதவியணியினரின் பங்குபற்றுதலுடன் வருடாந்தம் செயலமர்வு நடாத்தப்படுவதோடு, இதற்கமைவாக 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயலமர்வை 2018 பெப்ரவரி மாதத்தில் கொழும்பில் நடாத்துவதற்கு அனுசரணை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.