2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ உத்தியோகத்தர் களுக்கும் ஏனைய சுகாதார பணியாட்டொகுதியினருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களை / வீட்டுவசதிகளை வழங்குதல் - அரச மற்றும் தனியார்துறை பங்களிப்பின் மூலம் செயற்படுத்தப்படும் கருத்திட்டத்தின் மூலம் தூர கிராமிய பிரதேசங்களில் சேவையாற்றும் மருத்துவ உத்தியோகத்தர் களினதும் ஏனைய சுகாதார பணியாட்டொகுதியினரினதும் அடிப்படை இருப்பிட தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு கடந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டது. இதற்கமைவாக, மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளுக்கும் மாகாண மருத்துவமனைகளுக்கும் இணைக்கப்பட்டுள்ள நிபுணத்துவ மருத்துவ உத்தியோகத்தர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள், பயிற்சி நிலை மருத்துவ உத்தியோகத்தர்கள் சார்பிலும் ஏனைய சுகாதார பணியாட்டொகுதியினர் சார்பிலும் அரசாங்க - தனியார் கூட்டுத்தொழில்முயற்சியின் கீழ் உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |