• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உடல் உறுப்புக்கள் மற்றும் இழையங்கள் மாற்று சிகிச்சைக்காக அவற்றை தானமாக வழங்கும் பொருட்டு சாரதிகளிடமிருந்து சம்மதத்தினைப் பெற்றுக் கொள்ளல்
- ஆரோக்கியமான ஒருவரினால் அவருடைய சுய விருப்பத்தின்பேரில் தானமாக வழங்கும் உடல்உறுப்பொன்று குறித்த உடல் உறுப்பு சேதமடைந்த ஆளொருவரின் உடலில் வெற்றிகரமாக மாற்றுதலானது மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் பரவலாகி வருகின்றது. உயிரோடு இருப்பவர்களுக்கும் அதேபோன்று மூளை மரணித்த அல்லது குருதி சுற்றோட்டமுறை செயலிழந்து மரணித்த ஆட்களும் முன்கூட்டியே விருப்பத்தை வௌிப்படுத்தியிருந்தால் அவர்களுடைய உடல்உறுப்புகளைத் தானமாக வழங்கலாம். வீதி அனர்த்தம் காரணமாக ஏற்படும் மூளை செயலிழப்பு அல்லது குருதி சுற்றோட்டமுறை செயலிழப்பு என்பன காரணமாக மரணிக்கும் சாரதிகளின் உடல்உறுப்புகள் மற்றும் இழையங்கள் அத்தியாவசிய நோயாளிகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியத்தை வழங்கி, அவர்களுடைய உடல்உறுப்புகள் மற்றும் இழையங்களை தானமாக வழங்குவதற்கு விருப்பத்தை தெரிவிப்பதற்கு சாரதிகளுக்கு இயலுமாகும் வகையில் விருப்பத்தை வௌிப்படுத்தும் பிரகடனமொன்றை உள்ளடக்கி சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் அத்துடன் புதுப்பித்துக் கொள்ளும் விண்ணப்பங்களைத் திருத்துவதற்கும் அவ்வாறு வழங்கப்பட்ட விருப்பம் வௌித்தெரியும் விதத்தில் தற்போது நடைமுறையிலுள்ள சாரதி உரிமப் பத்திரங்களை திருத்துவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.