2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வறட்சி நிலைமையில் நீர் விநியோக வசதிகளை முகாமித்தல் - தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை நிலைமை கிராமிய பிரதேசங்களில் சிறு சமூக நீர் வழங்கல் முறைமைக்குக் கடுமையான தாக்கத்தை விளைவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக இந்த நீர் வழங்கல் முறைமைகளில் நீர் வழங்கும் ஆற்றல் குறைவடைந்துள்ளதோடு, நீருக்கான கேள்வி அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நீர் பவுசர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர் வழங்கல் பணிகளை விரிவுபடுத்துவதற்கும் 400 குழாய் கிணறுகளை நிருமாணிப்பதற்கும் வறட்சிக்கு உட்படக்கூடிய கிராமிய பிரதேசங்களில் தற்போதுள்ள கையால் இயக்கக்கூடிய 1,000 பொது ஆழக்கிணறுகளை திருத்தி புனரமைப்பதற்கும் கையால் இயக்கூடிய 200 கிணறுகளை கஷ்டப் பிரதேச கிராமங்களில் நிருமாணிப்பதற்கும், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பதற்கும் நீர் வழங்கல் திடீரென இல்லாமற்போகும் சந்தர்ப்பங்களில் தேவையான துரித நடவடிக்கைகளை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |