2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கண்டி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நகர திண்ம கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் - கண்டி மாவட்டத்தின் மாநகர சபை அதிகார பிரதேசத்திலிருந்தும் ஏனைய உள்ளூராட்சி அதிகார பிரதேசங்களிலிருந்தும் நாளாந்தம் சுமார் 250 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் சேர்வதோடு, இந்த திண்மக் கழிவுகளை சுற்றாடல் நட்புறவுமிக்கதாக அகற்றுவதற்கு கூட்டு வழிமுறையொன்றைத் தாபிக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக திறந்த பிரேரிப்புகள் கோரப்பட்டதன் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முதலீட்டாளர் ஒருவரும் கண்டி மாநகர சபையும் இணைந்து தாபித்துக் கொள்ளும் கூட்டுக் கம்பனியொன்றினால் கண்டி மாவட்டத்திற்கான திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |