2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுடுகலன்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் - நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படும் விதத்தில் சுடுபடைக்கலன்களைப் பாவித்தல், கமத்தொழில் பயிர்ச்செய்கைகள் உட்பட ஏனைய சொத்துக்களை பாதுகாப்பதற்காக சுடுகலன்களை வழங்கும் போதும் சுடுகலன்களைப் பயன்படுத்தும்போதும் இணங்கியொழுகப்பட வேண்டிய வழிமுறைகளைத் திருத்துதல் அத்துடன் பொது இடங்களில் சுடுகலன்களை பயன்படுத்துதலை தடைசெய்தல் அடங்கலாக காலத்தின் தேவைக்கேற்ற விதத்தில் 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுடுகலன்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென இனங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் இந்தக் கட்டளைச் சட்டத்திற்குச் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |