• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
- பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வெளிப்படுத்தல்கள் பதிவு செய்யப்பட்டவுடன் குறித்த சந்தேக நபருக்கு சட்டத்தரணியின் உதவியினைப் பெற்றுக் கொள்ளும் உரிமையினை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்ட போதிலும் அக்கறையுள்ள சில தரப்பினர்களினால் செய்யப்பட்ட பிரதிநிதித்துவமானது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த சட்டமூலமானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதன் பின்னர் சட்டப்பணிகள் (ஊழல்எதிர்ப்பு) மற்றும் ஊடகம் தொடர்பிலான பாராளுமன்ற துறை மேற்பார்வை குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய நோக்கம் சார்பில் மிகச் சிறந்த ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவு ஒன்றை தயாரிக்கும் பொருட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் பிரதிநிதிகளையும் பிற தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கமைவாக இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடுகள் உள்ள வரைவினை அடிப்படையாகக் கொண்டு உரிய நோக்கத்திற்கான சட்டங்களை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அவ்வாறு தயாரிக்கப்படும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.