2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 60 மெகா வொட் மேலதிக மின்சார கொள்வனவு - நாட்டில் தற்போது நிலவும் உலர் காலநிலை நிலைமையின் கீழ் உருவாக்ககூடிய மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து தொடர்ச்சியான மின்சார விநியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான சிபாரிசுகள் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் பிரதான சிபாரிசொன்றானது புதிதாக மின்சார உற்பத்தி கொள்ளளவொன்றை உடனடியாக முறைமைக்குள் சேர்ப்பதாகும். இதற்கமைவாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்பின் பிரகாரம் ஆறு (06) மாதங்களைக் கொண்ட குறுகிய காலங்களின் சார்பில் மின்சாரத்தை உற்பத்திகளுக்காக பயன்படுத்தும் நோக்கில் திறந்த சருவதேச போட்டி கேள்வி கோருவதன் மூலம் 60 மெகா வொட் கொள்ளளவு கொண்ட மின் பிறப்பாக்கி இயந்திரங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |