2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
21. தற்போது ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ள எண்ணெய் உலை மின்நிலையங்களின் உடன்படிக்கைக் காலத்தை ஆறு (06) மாதத்தால் நீடித்தல் - நாட்டில் தற்போது நிலவும் உலர் காலநிலை நிலைமையின் மீது எதிர் காலத்தில் உருவாகக் கூடிய மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்கும் நாட்டில் தொடர்ச்சியான மின்விநியோகத்தைப் பேணுவதற்குமாக மின்சார கொள்வனவுக்குரியதாக இலங்கை மின்சார சபைக்கும் பின்வரும் கம்பனிகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் நீடிப்பதற்காக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது பரிசீலனை செய்யப்பட்டு அமைச்சரவையினால் இந்த உடன்படிக்கைகளை ஆறு (06) மாத காலத்திற்கு நீடிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது: * வரையறுக்கப்பட்ட ACE Power எம்பிலிபிட்டிய (தனியார்) கம்பனி * வரையறுக்கப்பட்ட ACE Power ஜெனரேஷன் மாத்தறை (தனியார்) கம்பனி * வரையறுக்கப்பட்ட ஹெலதனவ் (தனியார்) கம்பனி |