2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1946 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நீர்ப்பாசன கட்டளைச் சட்டத்தை நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துதல் - மகாவலி அதிகார பிரதேசம் தவிர, இலங்கையில் ஏனைய சகல பிரதேசங்களிலும் அமைந்துள்ள பிரதான நீர்ப்பாசன கட்டமைப்புகளின் நிருமாணிப்பு, மேம்பாடு மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்கான பொறுப்பு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் பொறுப்புகளை வெற்றிகரமாகவும் வினைத்திறமையாகவும் நிறைவேற்றும் வகையில் நடைமுறைத் தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 1946 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நீர்ப்பாசன கட்டளைச் சட்டத்தை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |