2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கரதியான மற்றும் முத்துராஜவெல பிரதேசங்களில் நகர திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - கொழும்பு மற்றும் கம்பஹ மாவட்டங்களில் ஒன்று சேரும் கழிவுகளை முகாமிப்பது தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வொன்றாக Incineration தொழினுட்பத்தைப் பயன்படுத்தி கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு கருத்திட்டங்களை கரதியான மற்றும் முத்துராஜவெல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க - தனியார் கூட்டு அடிப்படையின் கீழ் இந்த கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு அதன் சார்பில் அரசாங்க கொள்வனவு நடைமுறைக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |