2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குதல் - கொழும்பு - 07, விஜேராம மாவத்தையிலுள்ள தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் முகாமைத்துவம், தகவல் தொழினுட்பம் மற்றும் மொழிக் கல்வி தொடர்பிலான பயிற்சி பாடநெறிகளுக்கு தற்போது சுமார் 10,500 மாணவர்கள் கலந்து கொள்வதோடு, இந்த பாடநெறிகளுக்காக நிலவும் கேள்வி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. ஆயினும் நிறுவனத்தில் தற்போது நிலவும் இடவசதி போதுமானதாக இல்லாததன் விளைவாக பாடநெறிகளுக்கு அதிகரித்துவரும் கேள்வியை பூர்த்தி செய்வதற்கும் புதிய பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கும் இயலாதுள்ளது. புதிய கட்டடமொன்றை நிருமாணித்து தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்து வதற்காக இந்த நிறுவனத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கமத்தொழில் அமைச்சுக்குச் சொந்தமான சுமார் 45 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்திற்கு உடமையாக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |