2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சி பிரிவொன்றைத் தாபித்தல் - தேசிய முன்னுரிமை மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக செய்யப்படும் கருத்திட்டங்கள் அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதன் பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான கருத்திட்டங்களை தேர்தெடுக்கும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் முகாமிக்கும் போதும் உரிய அமைச்சுகளுக்கு ஒத்தாசை நல்குவதற்கும் ஆலோசனை வழங்குவதற்குமாக இந்த விடயங்கள் தொடர்பிலான நிபுணர்கள் அடங்கிய பிரிவொன்றை நிதி அமைச்சில் தாபிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |