2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திடமிருந்து களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு மேலதிக நிதியை பெற்றுக் கொள்ளல் - அபிவிருத்திக்கான சவுதி நிதியம், அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் என்பவற்றினால் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டமானது தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் நிருமாணிப்புப் பணிகள் 2018 ஆம் ஆண்டு திசெம்பர் மாதமளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இந்த கருத்திட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட ஒப்பந்தச் செலவானது. 140.35 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, இதில் அண்ணளவாக 89.85 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அபிவிருத்தி பங்காளர்களினால் வழங்கப்படும். இதற்கமைவாக, சுமார் 50.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மேலதிகமாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளதோடு, இந்த தொகையிலிருந்து சுமார் 16.5மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சலுகை நிபந்தனைகளின் கீழ் பெற்றுக் கொள்வதற்காக அரபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |