• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையில் கூட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பானது 60 வருடங்களுக்கு மேலாக காணப்படுவதோடு, பல்வேறுபட்ட விடய துறைகளில் நீண்டகால புலமைப்பரிசில்கள் இலங்கைக்கு வழங்கும் முக்கிய நாடொன்றாக அவுஸ்திரேலியாவைக் குறிப்பிடலாம். அவுஸ்திரேலியா உதவி நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கையில் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்து வதனை உறுதிப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று 1998 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்டதோடு, அண்மைக்காலத்தில் இருநாடுகளிலும் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.