• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க பசுமைக் கட்டடங்களாக நிருமாணிப்பதற்கும் பேணுவதற்குமான வழிகாட்டல் கோவையை நடைமுறைப்படுத்தல்
- நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்கான பசுமை மற்றும் சுற்றாடல் நட்புறவுமிக்க நிருமாணிப்பு துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதன்போது அரசாங்க நிறுவனங்களின் கட்டிடங்களை சிறந்த சுற்றாடல் நட்புறவுமிக்கதாக நிருமாணித்தல், நிருமாணிப்பு மற்றும் பேணல் தொடர்பிலான வழிகாட்டல்களுக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வலுசக்தி வினைத்திறன் நிலையான பூமி திட்டமிடலும் முகாமைத்துவமும், நிருமாணிப்புக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் வளங்களின் முகாமைத்துவம், கட்டட உட்பகுதியின் தரம், நீர் வினைத்திறன், பசுமை நெகிழ்ச்சித்தன்மை மற்றும் அவற்றின் சமூக கலாசார ஒத்திசைவு போன்ற துறைகளினூடாக புதிய நிருமாணிப்புகளின் சுற்றாடல் நட்புறவுமிக்கதாவென்பது பற்றி அளவிடும் முறை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தாபன ரீதியிலான கட்டமைப்பு என்பன உள்ளடக்கப்பட்ட முழுமையான வழிகாட்டல் கோவைக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.